பாகிஸ்தானுடன் AMRAAM ஏவுகணை ஒப்பந்தம் இல்லை - தெளிவுபடுத்திய அமெரிக்கா
11 ஐப்பசி 2025 சனி 08:38 | பார்வைகள் : 825
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு புதிய AMRAAM ஏவுகணைகள் வழங்கப்படுவதாக பரவிய செய்திகளை மறுத்துள்ளது.
செப்டம்பர் 30-ஆம் திகதி வெளியான போர்த்துறை அறிவிப்பில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கான பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது, ஏவுகணை பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் வழங்குவதற்கானதுதான் என்றும், புதிய ஏவுகணைகள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்த மாற்றம் Raytheon நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, ஒட்டுமொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
இதில், பிரித்தானியா, ஜேர்மனி, இஸ்ரேல், அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் 2030 மே மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தனது F-16 விமானங்களுக்கு 700 AMRAAM ஏவுகணைகளை வாங்கியிருந்தது.
இது, அந்த நேரத்தில் சர்வதேச அளவில் மிகப்பாரிய AMRAAM வாங்கும் ஒப்பந்தமாக இருந்தது.
சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்ததைத் தொடர்ந்து, புதிய ஏவுகணை ஒப்பந்தம் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
இவ்வாறு, பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கப்படுவதாக பரவிய தவறான தகவல்களுக்கு அமெரிக்கா தெளிவான மறுப்பு அளித்துள்ளது. இது, தெற்காசிய பாதுகாப்பு சூழ்நிலையைப் பொருத்தவரை முக்கிய விளக்கமாகும்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan