Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்திய அணி!

ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்திய அணி!

ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்திய அணி!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 12:52| பார்வைகள் : 227


இந்தியா அணி 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைபற்றியது.

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் இந்தியா அணி சர்பாக சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டுயையும் பெற்றனர்.

50 ஓவர்களில் 51 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 6.1 ஓவர்களில் 51 ஓட்டங்களை பெற்று 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைபற்றியமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்