Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா.... மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறாரா?

 நயன்தாரா.... மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறாரா?

20 மாசி 2024 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 893


நடிகை நயன்தாரா மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அவர் மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வர அதற்குப் பதில் கிடைத்துள்ளது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடியவர் நடிகை நயன்தாரா. கோலிவுட்டில் படங்கள் நடிப்பது ஒருபுறம் என்றால் இன்னொரு பக்கம் பல பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. கோலிவுட்டில் பெயர் எடுத்தப் பின்பு பாலிவுட்டில் மாஸாக அவர் என்ட்ரி கொடுத்தப் படம்தான் ‘ஜவான்'. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில்தான் இயக்குநர் அட்லியின் அடுத்தப் படம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகருடன் கைக்கோக்கிறார் அட்லி எனவும், மீண்டும் ஷாருக்கானுடனேயே இணைகிறார் எனவும் செய்திகள் வலம் வந்தாலும் அட்லி இவை எதையுமே இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த சூழலில்தான் நடிகை நயன்தாரா மும்பை சென்றுள்ளார். ஏர்போர்ட்டில் இவர் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதனால், மீண்டும் ஷாருக்கானுடன் நயன்தாரா நடிக்கிறாரா? அல்லது புதிய பாலிவுட் படப்பிடிப்பிற்காகதான் அவர் மும்பை சென்றுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால், அவர் மும்பையில் நடக்க இருக்கும் இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது விழாவிற்காகதான் வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்