Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் ஆறு பாடசாலை மாணவர்கள் வெளியேற்றம்.

பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் ஆறு பாடசாலை மாணவர்கள் வெளியேற்றம்.

19 புரட்டாசி 2023 செவ்வாய் 17:45 | பார்வைகள் : 4952


இன்று Seine-Maritime பகுதியில் உள்ள ஆறு கல்லூரிகள், உயர் கல்லூரிகளுக்கு,  தாங்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்த  இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டது இதனையடுத்து குறித்த ஆறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் குறித்த மின்னஞ்சல் போலியானது என தெரியவந்துள்ளது. இருப்பினும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே போன்ற மின்னஞ்சல் Saint-Denis (93) உள்ள ஒரு கல்லூரிக்கும், Tarbes (Hautes-Pyrénées) உள்ள மற்றும் ஒரு கல்லுரிக்கும் அனுப்பப்பட்டது எனவும் அங்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்