Paristamil Navigation Paristamil advert login

பொல்லாத மனதின் துளிகள்

பொல்லாத மனதின் துளிகள்

14 கார்த்திகை 2023 செவ்வாய் 02:15 | பார்வைகள் : 2220


பொல்லாத மனதின் துளிகள்

சம்பவங்கள் எதுவும்
நிலையாய் நிற்பதில்லை

அடுத்த நொடிக்குள்
ஆயிரம் அசைவுகளுடன்
கடந்து கொண்டுதான்
இருக்கிறது

இருந்தும் ஏனோ
என்றோ நடந்த
நிகழ்வை எண்ணி
நாளும் பரிதவிக்குது
மனம்

அந்த நிகழ்வு
இனி
வராது என்பது
தெரிந்தும்


இருப்பவைகள்
வெறும் இருப்பாகத்தான்
இருக்கிறது நம்
அருகில்

உயிருள்ளவையோ
இல்லை உயிரற்றைவையோ

இழப்பவைகளை
மட்டுமே
இன்பமாய் நினைக்கின்றது
மனம்
அது ஏனோ?

எல்லா காட்சிகளை
கண்கள் கண்டாலும்
மனம் மட்டுமே
முடிவு செய்கிறது
தன்னுள் எதை
ஏற்கவேண்டும் என்பதை

சமூக நிகழ்வின்
சந்தை என்பது
மனிதர்களின்
மன அசைவுகள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்