Paristamil Navigation Paristamil advert login

 யாழ்.மண்ணை அடைந்தது சாந்தனின் புகழுடல்!

 யாழ்.மண்ணை அடைந்தது சாந்தனின் புகழுடல்!

3 பங்குனி 2024 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 2665


சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி வடமராட்சி-நெல்லியடியை சென்றடைந்தது. பூதவுடலுக்கு மலர் தூவி பொது மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சாந்தனின் புகழுடலுக்கு 33 வருட துயர்துடைக்க சாந்தனுக்காய் போராடிய அவரது சட்டத்தரணி புகழேந்தி அஞ்சலி செலுத்தினார்.

ராஜுவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்றுமொருவரான முருகனின் தாயாரும் சாந்தனின் புகழுடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மேலும், திருகோணமலை தியாகிகள் நினைவு மண்டபத்தில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்