இலங்கையி்ல நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை
![இலங்கையி்ல நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை](ptmin/uploads/news/SriLanka_renu_water d.jpg)
27 ஆடி 2023 வியாழன் 03:19 | பார்வைகள் : 3090
இலங்கையி்ல எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.