ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து - 63 பேர் பலி
![ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து - 63 பேர் பலி](ptmin/uploads/news/World_renu_New Project - 2023-08-17T143050.344.jpg)
17 ஆவணி 2023 வியாழன் 09:01 | பார்வைகள் : 3776
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் 56 உடல்களை மீட்டனர். மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.