Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து! சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து!  சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி

12 ஆடி 2023 புதன் 05:50 | பார்வைகள் : 5374


நேபாளத்தில் இருந்து மெக்சிகோ நாட்டினரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் எவரெஸ்ட் அருகே சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பயணிகளும்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று மணி நேர தேடுதலுக்குப் பிறகு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களும், உயிரிழந்த 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சுர்கே விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டு செல்ல வேண்டிய ஹெலிகாப்டர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணியளவில் புறப்பட்டது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட எட்டு நிமிடங்களில் சிக்னல் தவறிவிட்டதாக திரிபுவன் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

9N-AMV (AS 50) பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

மலைப்பாங்கான சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள லம்ஜுரா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்னல் துண்டிக்கப்பட்டவுடன், ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர்கள் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்