Paristamil Navigation Paristamil advert login

பாரிசில் பயங்கரவாத தாக்குதல் 13/11 பிரதமர், மற்றும் பாரிஸ் தலைநகர நகரபிதா ஆகியோர் பங்கேற்பு.

பாரிசில் பயங்கரவாத தாக்குதல் 13/11 பிரதமர், மற்றும் பாரிஸ் தலைநகர நகரபிதா ஆகியோர் பங்கேற்பு.

13 கார்த்திகை 2023 திங்கள் 10:05 | பார்வைகள் : 4709


இன்று பாரிசில் இடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலால் 130 மனித உயிர்கள் பலியான நாள், nation பகுதியில் இருந்து boulevard Voltaire வழியாக அருந்தகங்கள், உணவகங்கள், Bataclan கலையரங்கு, மற்றும் Seine-Saint-Denis பகுதியில் உள்ள Stade de France ஆகிய பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கொன்ற குவித்த நாள் இன்றாகும்.

2015 நவம்பர் 13ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது, இன்று எட்டாவது ஆண்டு கடந்துவிட்ட நிலையில் பிரதமர் Élisabeth Borne மற்றும் தலைநகரின் நகரபிதா Anne Hidalgo ஆகியோர் காலையில் Stade de France பகுதிக்குச் சென்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று பலியான அப்பாவிப் பொதுமக்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்