வெளிநாடு ஒன்றில் 200 இலங்கையர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்

13 கார்த்திகை 2023 திங்கள் 14:51 | பார்வைகள் : 12608
ஜோர்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கையர்கள் விசா நீடிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது ஜோர்டானின் சஹாப், அல் ஜுமாத் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
விசா நீடிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் தற்போது எதிர்நோக்கி வருவதாக இலங்கையர்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1