Paristamil Navigation Paristamil advert login

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 06:52 | பார்வைகள் : 1677


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்