Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் நீதியமைச்சரிற்குச் சிறைத்தண்டனை!!

பிரான்சின் நீதியமைச்சரிற்குச் சிறைத்தண்டனை!!

15 கார்த்திகை 2023 புதன் 21:35 | பார்வைகள் : 4113


நீதியைக் காப்பாற்ற வேண்டியவரே குற்றம் செய்துள்ளார். பிரான்சின் நீதியமைச்சரான எரிக்-துபோன்-மொரெத்தி (Éric Dupond-Moretti) மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

அவர் தனது அதிகாரங்கரளைத் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதியமைச்சர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவர் சட்டத்தரணியாக இருந்த சமயம், இவர் வழக்குகளில் இவரிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் மீது தன் நீதியமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திப் பழிவாங்கி உள்ளார்.

இவரது வழக்கு குடியரசு நீதிமன்றமான CRJ ( Cour de Justice de la République) விசாரிக்கப்பட்டுள்ளது.

அரசதரப்பு வழக்கறிஞர், இவரிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கும்படி கோரி உள்ளார்.

இவரிற்கான தண்டனை உறுதி செய்யப்பட்டால் இவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்