Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

16 கார்த்திகை 2023 வியாழன் 03:28 | பார்வைகள் : 4573


இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 225 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்சரிவு அபாய வலயத்தில் அமைந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்