Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்! - பிரதமர் உறுதி!!

வெள்ளம் : தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்! - பிரதமர் உறுதி!!

16 கார்த்திகை 2023 வியாழன் 09:55 | பார்வைகள் : 2770


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அனைத்து நவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது Pas-de-Calais ஆகும். இன்று வியாழக்கிழமை காலை அங்குள்ள Neuville-sous-Montreuil நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர், நிலமைகளை நேரில் ஆராய்ந்தார். அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினருடன் கலந்துரையாடினார். 

"நாங்கள் தயாராக இருக்கின்றோம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்துக்கும் அவசியமான உரிய நடவடிக்கைகளை எடுப்போம்." என உறுதியளித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பா-து-கலே பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்