Paristamil Navigation Paristamil advert login

பத்தகலோன் தாக்குதலாளின் சகோதரன் ஒருவர் நாடு கடத்தல்!

பத்தகலோன் தாக்குதலாளின் சகோதரன் ஒருவர் நாடு கடத்தல்!

18 கார்த்திகை 2023 சனி 07:00 | பார்வைகள் : 3290


பத்தக்கலோன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் சகோதரன் ஒருவர் பிரான்சில் இருந்து குடியுரிமை நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பத்தகலோன் திரையங்கரில் தற்கொலை தாக்குதல் நடத்திய Foued எனும் பயங்கரவாதியின் சகோதரன் Karim Mohamed-Aggad என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். குறித்த Wissembourg, (Alsace) நகரைச் சேர்ந்தவர் எனவும், அவர் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை சிரியாவில் வசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குடியுரிமை நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட தகவல் நவம்பர் 16 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது வெளியேற்றத்துக்கான அறிக்கையில் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்