Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேங்காய் திருடிய நபர் சுட்டுக் கொலை

இலங்கையில் தேங்காய் திருடிய நபர் சுட்டுக் கொலை

19 கார்த்திகை 2023 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 2560


மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை காவலாளி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்