Paristamil Navigation Paristamil advert login

முதல் முறையாக ரச்சிதாவை பிரிந்தது குறித்து மனம் திறந்த தினேஷ்..!

முதல் முறையாக ரச்சிதாவை  பிரிந்தது குறித்து மனம் திறந்த தினேஷ்..!

21 கார்த்திகை 2023 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 2699


பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முந்தைய சீசன் போல் இல்லாமல் இந்த சீசனில் சில அதிரடி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக பிக் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என இரண்டு ஹவுஸ்கள் பிரிக்கப்பட்டது, ஒட்டுமொத்தமாக 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்கியது என பிக் பாஸ் அதிரடி காட்டினார்.

இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு ’உங்கள் வாழ்க்கையில் ஒரு பூகம்பம்’ என்ற ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பத்தை மனதில் இருந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த டாஸ்க்கில் விசித்ரா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பத்தை கண்ணீருடன் தெரிவித்த போது அவருக்கு சக போட்டியாளர்கள் வந்து அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினர்

அதேபோல் மாயா தனது வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு சோகம் நடந்தது என்றும் அதை பற்றி நான் யாரிடமும் பேச முடியவில்லை, பகிர்ந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் யாருக்கும் புரியவில்லை என்று கூறினார்.

இதனை அடுத்து ஜோவிகா என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பூகம்பம் என்றால் அது எங்க அம்மம்மா இறந்தது தான என வருத்தத்துடன் கூறினார். இதனை அடுத்து தினேஷ் கூறிய போது ’நானும் என் மனைவியையும் வாழ்க்கையில் பிரிந்தோம். எங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தோம், அதை இப்போதும் நான் எதிர்கொண்டு தான் இருக்கின்றேன்’ என்று கூறினார். முதல் முறையாக தினேஷ் ஆனது மனைவி ரக்ஷிதா குறித்து கூறியதை அடுத்து இன்றைய எபிசோடு சென்டிமென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்