Paristamil Navigation Paristamil advert login

RER E : தொடருந்து மோதி ஒருவர் பலி!!

RER E : தொடருந்து மோதி ஒருவர் பலி!!

22 கார்த்திகை 2023 புதன் 19:30 | பார்வைகள் : 4297


RER E தொடருந்துடன் மோதுண்ட ஒருவர் உடல் நசுங்கி கொல்லப்பட்டுள்ளார். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.25 மணி அளவில் gare Rosa-Parks நிலையத்தில் பயணி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையில், தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். குறித்த தொடருந்து நிலையத்துக்கு இறுதி நிமிடத்தில் வந்தடைந்த குறித்த பயணி, தொடருந்தை கைப்பற்றிவிட நினைத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

RER E தொடருந்து சாரதி மதுபாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து மாலை முழுவதும் அங்கு போக்குவரத்து தடைப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்