Paristamil Navigation Paristamil advert login

முல்லைத்தீவில் கோர விபத்து - கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி

முல்லைத்தீவில் கோர விபத்து - கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி

23 கார்த்திகை 2023 வியாழன் 06:42 | பார்வைகள் : 1569


முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று வியாழக்கிழமை காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதாகவும் இதனால் பேருந்துடன் மோதி தான் தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றயவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் என்பவராவார்.

மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்