Paristamil Navigation Paristamil advert login

மஹிந்த – கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த திட்டம்?

மஹிந்த – கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த திட்டம்?

23 கார்த்திகை 2023 வியாழன் 08:24 | பார்வைகள் : 1463


முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

நாட்டை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டின் பேரில் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தண்டனை பெற்றுள்ளனர் எனவே அவர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இந்த பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக அறுபத்திரண்டு வாக்குகளும் கிடைத்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்