Paristamil Navigation Paristamil advert login

சிஎஸ்கே அணியில் மீண்டும் சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கே அணியில் மீண்டும் சுரேஷ் ரெய்னா

24 கார்த்திகை 2023 வெள்ளி 08:46 | பார்வைகள் : 1613


சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை தொடர் நிறைவடைந்து இந்திய ரசிகர்கள் அனைவரும் 2024 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

சுமார் 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


அதே சமயத்தில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி உட்பட எந்த அணியும் கடந்த ஏலத்தில் எடுக்காத நிலையில். அவர் தொடர்ந்து லெஜண்ட் கிரிக்கெட்டில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

இந்நிலையில், சமிபத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி ஷாக்சியை சுரேஷ் ரெய்னா சந்தித்தார். 

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் திரும்பி வருவதற்கான பணிகளை ரெய்னா தோனியை சந்தித்து எடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை வீரராக இல்லை என்றாலும் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் போல் ரெய்னாவும் பயிற்சியாளராக கூட அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்