Paristamil Navigation Paristamil advert login

10% மின்கட்டண உயர்வு! - தவிர்க்கமுடியாதது என்கிறார் மின்வாரிய உயரதிகாரி!!

10% மின்கட்டண உயர்வு! - தவிர்க்கமுடியாதது என்கிறார் மின்வாரிய உயரதிகாரி!!

24 கார்த்திகை 2023 வெள்ளி 13:52 | பார்வைகள் : 4199


மின்சாரக் கட்டணத்தின் விலை 10% சதவீதத்தால் அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என பிரெஞ்சு மின்சாரவாரியத்தின் நிர்வாக இயக்குனர் (CEO) Luc Rémont தெரிவித்துள்ளார். 

அதேவேளை, மின்சார கட்டணத்தை 10% சதவீதத்துக்கு மிகாதவாறு கட்டுப்படுத்தவும் முடியும் எனவும் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு பிரான்சின் ஒரு மெகாவாட் (mwh) மின்சாரம் €70 யூரோக்களை நெருங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை மட்டுப்படுத்தி வைக்க தேவையான நடவடிக்கைகளையும், மின்கட்டணத்தை பயன்படுத்துவோருக்கான உதவிகளை வழங்கவும் மின்சார வாரியம், எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacher உடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்