Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு பாடசாலைகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பல்வேறு பாடசாலைகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

24 கார்த்திகை 2023 வெள்ளி 17:09 | பார்வைகள் : 2508


இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் உள்ள பல்வேறு பாடசாலைகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பல நிலையங்களில் கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டன.

Ardèche , Rennes, Saint-Hélier மற்றும் Gironde போன்ற நகரங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கும், சில கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பெரும்பாலான அச்சுறுத்தல்கள் மின்னஞ்சலூடாக விடுக்கப்பட்டது.

Gironde மாவட்டத்தில் உள்ள Jean-Renou de La Réole மற்றும் Jean-Moulin de Langon பாடசாலைகளுக்கு பதின்மூறாவது தடவையாக இன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்