Paristamil Navigation Paristamil advert login

தோனியை யாராலும் கேள்வி கேட்க முடியாது..! CSK வீரர்

தோனியை யாராலும் கேள்வி கேட்க முடியாது..! CSK வீரர்

26 கார்த்திகை 2023 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 1737


அணியின் கேப்டனான தோனி எடுக்கும் முடிவுகள் 99.99% சரியான முடிவுகளாக தான் இருக்கும் என அம்பதி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்து கொள்ளவும், வீரர்களை விடுவிக்கவும், அல்லது வீரர்களை அணிகளுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ளவும் இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுத்த வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் பேட்டியளித்து இருந்த சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, கேப்டனான தோனி எடுக்கும் எந்தவொரு முடிவையும் இந்திய கிரிக்கெட்டில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கேப்டனான தோனி எடுக்கும் முடிவுகள் 99.99% சரியான முடிவுகளாக தான் இருக்கும். தோனி வீரர்களின் தனித் திறமைகளை நிச்சயம் வெளிக் கொண்டுவார் எனபதை அனைவரும் அறிவார்கள்.

சொல்லப்போனால், csk அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளி கொண்டு வந்துள்ளார் என அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்