Paristamil Navigation Paristamil advert login

படகில் பயணித்த இரு அகதிகள் பலி - ஆட்கடத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!!

படகில் பயணித்த இரு அகதிகள் பலி - ஆட்கடத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!!

26 கார்த்திகை 2023 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 3524


பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்த நிலையில், இந்த பயணத்தை ஏற்பாடு செய்த நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை Equihen-Plage (Pas-de-Calais) கடற்பிராந்தியம் வழியாக சிறிய படகில் 60 வரையான அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த படகு பயணம் ஆபத்தில் சென்று முடிந்தது. படகு கடலில் மூழ்கியதை அடுத்து அதில் 30 வயதுகளையுடைய இருவர் பலியாகியிருந்தனர். ஏனைய அகதிகளை கடற்படையினர் மீட்டிருந்தனர்.

இந்த ஆட்கடத்திலில் நால்வர் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

அகதிகளில் சட்டவிரோத கடற்பயணத்தில் இவ்வருடத்தில் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்