Paristamil Navigation Paristamil advert login

பா-து-கலே மாவட்டத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!!

பா-து-கலே மாவட்டத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!!

26 கார்த்திகை 2023 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 2311


பா-து-கலே மாவட்டத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நாளை திஙகட்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பா-து-கலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க உள்ளன. பல்வேறு வீதிகள் முடக்கப்படலாம் எனவும் அறிய முடிகிறது. நாளை நண்பகல் வரை அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பா-து-கலே மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல நாட்கள் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்