Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்! - அனுமதி அளித்த காவல்துறையினர்!!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்! - அனுமதி அளித்த காவல்துறையினர்!!

1 கார்த்திகை 2023 புதன் 12:56 | பார்வைகள் : 3848


நாளை வியாழக்கிழமை பரிசில் இடம்பெற உள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த ஆர்ப்பாட்டம், நவம்பர் 2 ஆம் திகதி மாலை Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். *முன்னதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin, ‘வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்படமாட்டாது!” என அறிவித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,077 பேருக்கு குற்றப்பணமும் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்