Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கைத்தொலைபேசியை கொடுக்காததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு

இலங்கையில் கைத்தொலைபேசியை கொடுக்காததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு

2 கார்த்திகை 2023 வியாழன் 03:13 | பார்வைகள் : 2463


கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர்  செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.

சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் பிரயாண அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்