Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தந்தை அடித்ததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு

இலங்கையில் தந்தை அடித்ததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு

2 கார்த்திகை 2023 வியாழன் 11:52 | பார்வைகள் : 2650


சிறுமியின் தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று தலவாக்கலை பிரதேசத்தில் புதன்கிழமை  பதிவாகியுள்ளது.

வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் சிறுமியின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நுவரெலியா வைத்திய சாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்