Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி

உலகக்கோப்பை அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி

3 கார்த்திகை 2023 வெள்ளி 02:31 | பார்வைகள் : 1900


இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. 

இதன்மூலம் 7 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணி மட்டுமே தற்போது அரையிறுதியை உறுதி செய்துள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். 

உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் (44) கைப்பற்றிய ஜாகீர் கானின் சாதனையை ஷமி (45) முறியடித்தார். 

அதிகமுறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 5 விக்கெட்கள் (3) வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ஷமி சமன் செய்தார்.

அத்துடன் இந்திய அணிக்காக அதிகமுறை (4) ஐந் து விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும், ஷமி படைத்தார்.        

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்