Paristamil Navigation Paristamil advert login

சியாரா புயல்! - பிரதமர் வெளியிட்ட புதிய சேத விபரங்கள்!!

சியாரா புயல்! - பிரதமர் வெளியிட்ட புதிய சேத விபரங்கள்!!

3 கார்த்திகை 2023 வெள்ளி 13:07 | பார்வைகள் : 3895


 சியாரா புயல் ஏற்படுத்திய சேத விபரங்கள் தொடர்பாக பிரதமர் Élisabeth Borne சில புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புயலினால் பிரான்சில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் Caen (Calvados) நகர தீயணைப்பு நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர், அங்கு வைத்தே இதனை ஊடகங்களிடம் தெரிவித்தார். ' பொதுமக்கள் பொறுப்புணர்வோட நடந்துகொண்டிருந்தால் இந்த சேதத்தினை அதிகமாக தடுத்திருக்கலாம்!' என அவர் குறிப்பிட்டார்.

சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 450,000 வீடுகள் மின்சார  துண்டிப்புடன் இருப்பதாகவும், தொடருந்து போக்குவரத்துக்கள் மெல்ல மெல்ல சீரடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்