Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் இருந்து பிரெஞ்சுக் குடும்பங்கள் வெளியேற்றம்!

காஸாவில் இருந்து பிரெஞ்சுக் குடும்பங்கள் வெளியேற்றம்!

3 கார்த்திகை 2023 வெள்ளி 18:55 | பார்வைகள் : 3825


காஸா பகுதியில் வசித்த பிரெஞ்சு மக்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

34 நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்று வெள்ளிக்கிழமை காலை காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என அறிய முடிகிறது. 

காஸாவில் வசிக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்ட மக்களை அதன் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை எகிப்த்திய எல்லை வழியாக வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 700 பேர் தங்களது குடும்பத்தினர் அங்கு வெளியேற தயாராக இருப்பதாக அறிய முடிகிறது. அவர்களில் 34 பிரெஞ்சுக் குடும்பத்தினர் இன்று வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்