Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியுடன் ரிஷி சுனாக் தொலைபேசியில் உரை

பிரதமர் மோடியுடன் ரிஷி சுனாக் தொலைபேசியில் உரை

4 கார்த்திகை 2023 சனி 11:32 | பார்வைகள் : 2371


மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என பிரிட்டன் பிரதமர்  ரிஷி சுனாக், பிரதமர் மோடியை தொலை பேசிய வாயிலாக  உரையாடிய போது வலியுத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இஸ்ரேல் -பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக  இருவரும் விவாதித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மேற்கு ஆசியாவில்  அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

பின்னர் ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ஓராண்டு நிறைவு நாளையொட்டி அவருக்கு  தனது வாழ்த்தையும்  மோடி தெரிவித்தார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்