Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அதிர்ச்சியில் மக்கள்

நேபாளத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அதிர்ச்சியில் மக்கள்

5 கார்த்திகை 2023 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 2623


நேபாளத்தில் மீண்டும் 05-11-2023 இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் காத்மாண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.

அண்மையில் நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தினார்.

 நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்து உள்ளது. 

 டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது.

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலை வெளியிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்