Paristamil Navigation Paristamil advert login

மின்சார ஊழியர் பலி!

மின்சார ஊழியர் பலி!

5 கார்த்திகை 2023 ஞாயிறு 11:00 | பார்வைகள் : 4393


சியாரா புயலினால் பாதிக்கப்பட்ட மின்சார தடையினை சீர் செய்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். 

Pont-Aven (Finistère) நகரில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. Enedis நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். 

புயல் காரணமாக மின் கம்பிகள் அறுந்து சேற்றுக்குள் விழுந்ததை அடுத்து, குறித்த ஊழியர் அதனை சரிப்படுத்த முற்பட்ட வேளையில் மின்சார தாக்குதலுக்கு இலக்கானார். 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சியாரா புயல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. மின்சார ஊழியர்கள் இடைவிடாது பணியாற்றி மின்சார வழங்கலை சீர்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்