விமான நிலையத்தில் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்! - சர்ச்சை!

6 கார்த்திகை 2023 திங்கள் 06:03 | பார்வைகள் : 12246
சாள்-து-கோல் விமான நிலையத்தில் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட கூட்டுப்பிராத்தனை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவும்-எதிர்ப்புமாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று நவம்பர் 5, ஞாயிற்றுக்கிழமை காலை Charles de Gaulle விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் காத்திருந்த இஸ்லாமிய பயணிகள் சிலர் அங்கு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பரிசில் உள்ள விமான நிலையங்களுக்கு பொறுப்பான (Aéroports de Paris) நிர்வாக அதிகாரி Augustin de Romanet இது தொடர்பாக தெரிவிக்கையில், “முதலில் இது வருந்தத்தக்கது. தொழுகை செய்வதற்கென இடங்கள் உள்ளன. விமான நிலையங்களுக்கான காவல்துறையினர் இது தொடர்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும், இது விவாதம் செய்ய வேண்டிய விடயம் இல்லை!” என தெவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1