மாபெரும் அரசியல் மாநாடு! - பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி மக்ரோன்!

6 கார்த்திகை 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 7169
Saint-Denis நகரில் இடம்பெற உள்ள மாபெரும் அரசியல் மாநாடு ஒன்றில் பங்கேற்க அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் நவம்பர் 17 ஆம் திகதி இந்த மாநாடு Saint-Denis நகரில் இடம்பெற உள்ளது. முன்னதாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி இதேபோன்ற மாநாடு இடம்பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 12 மணிநேரம் நீடித்த இந்த மாநாட்டை ஜனாதிபதி மக்ரோன் தலைமை தாங்கியிருந்தார்.
நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சனை தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அகதிகள், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.