Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வெள்ளம்! - Pas-de-Calais மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை - மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

மீண்டும் வெள்ளம்! - Pas-de-Calais மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை - மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

6 கார்த்திகை 2023 திங்கள் 17:11 | பார்வைகள் : 2931


திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக Pas-de-Calais மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Vienne, Deux-Sèvres, Charente-Maritime, Charente, Gironde மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக பிரான்சின் மேற்கு பகுதியில் அடைமழை, வெள்ளம் மற்றும் புயல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்