Paristamil Navigation Paristamil advert login

நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு- பிரதீப்புக்கு நீதி கிடைக்குமா?

நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு- பிரதீப்புக்கு நீதி கிடைக்குமா?

9 கார்த்திகை 2023 வியாழன் 04:27 | பார்வைகள் : 1929


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்னர் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இதனால் நாளுக்கு நாள் இந்நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. பிரதீப் ஆண்டனிக்கு எதிராக வாக்களித்த பெண்கள் நிக்சன் உருவ கேலி செய்த விஷயத்தை ஜாலியாக எடுத்துக்கொண்டதை இந்த வாரம் கமல்ஹாசன் தட்டிக்கேட்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக அமைந்துள்ளது பிக்பாஸின் தற்போதைய டாஸ்க்குகள், நேற்று போட்டியாளர்கள் பிறரைப்பற்றி புறம்பேசியதை குறும்படமாக போட்டு அதை ஒரு டாஸ்க் ஆக நடத்தினார். அதில் பலரது முகத்திரைகள் கிழிக்கப்பட்டன. அதேபோல் இன்றைய எபிசோடிலும் ஒரு சர்ச்சைக்குரிய டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

அதன்படி நீதிமன்றமாக மாறி இருக்கும் பிக்பாஸ் வீட்டில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வழக்கு தொடுக்க வேண்டுமோ அவர் மீது வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் விசித்ராவுக்கு எதிராக கானா பாலா மற்றும் மாயா ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதேபோல் பூர்ணிமா மீது விஷ்ணு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் பூர்ணிமா உடன் விஷ்ணு காரசார விவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதனால் இன்றைய எபிசோடிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பிரதீப்பின் ரெட் கார்டு மேட்டருக்கு நீதி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்