Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற வானிலை! - 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - பா-து-கலே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சீரற்ற வானிலை! - 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - பா-து-கலே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!!

9 கார்த்திகை 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 3524


இன்று வியாழக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதை அடுத்து, 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடை மழை, புயல் மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதூ. குறிப்பாக அட்லாண்டிக் கடற்கரையை அண்மித்துள்ள 33 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும், Charente-Maritime(17), Nord(59), Seine-Maritime(76) ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும், 

Pas-de-Calais(62) மாவட்டத்துக்கு இன்று வெள்ள அபாயம் காரணன்மாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அங்கு பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்