Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த நபருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த நபருக்கு நேர்ந்த கதி

11 கார்த்திகை 2023 சனி 05:45 | பார்வைகள் : 2842


பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வசித்து வந்த அந்த வெளிநாட்டவர், இனி நாட்டில் தங்கும் உரிமையை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன ஹமாஸ் படைகளுக்கு அந்த நபர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். 

பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் ஏற்கனவே நாட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரவர்மேன் பரிசீலித்து வந்துள்ளார்.

தற்போது அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஹமாஸ் படைகளை ஆதரித்த விவகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டும் முதல் வெளிநாட்டவர் இவர் என கூறப்படுகிறது.

மேலும், குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பே இது தொடர்பான அச்சுறுத்தல் பற்றி எச்சரித்திருந்தார். 

மட்டுமின்றி, பிரித்தானியாவுக்கு வருபவர்கள் விசாவின் சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து, பயங்கரவாத செயல்களை அங்கீகரிக்க நேர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

மேலும், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் இதுபோன்ற வழக்கில் சிக்கும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவோ விசாவைத் திரும்பப் பெறவோ அரசாங்கம் தயங்காது என்பதில் சந்தேகமில்லை எனவும் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்