Paristamil Navigation Paristamil advert login

அகதிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் ஜேர்மனியர்கள்

அகதிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் ஜேர்மனியர்கள்

11 மார்கழி 2023 திங்கள் 09:27 | பார்வைகள் : 2798


கிழக்கு ஜேர்மனியிலுள்ள Gera என்ற பிரதேசத்தில் அகதிகள் தங்குவதற்காக வீடுகள் கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சனிக்கிழமை வலது சாரி அமைப்பொன்றைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அத்துடன், 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 150 பேர் நகரம் முழுவதும் ஊர்வலமாகவும் வந்தார்கள்.

 Wismut மருத்துவமனை என்னும் மருத்துவமனை அமைந்திருந்த இடத்தில், தற்போது அகதிகள் தங்குவதற்காக வீடுகள் கட்ட நகர அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள். 
அந்த கட்டிடங்களில் 200 அகதிகளை தங்கவைக்கமுடியும்.

ஆனால், ஒரு காலத்தில் இருகரம் நீட்டி அகதிகளை வரவேற்ற ஜேர்மனியில், இப்போது வலதுசாரிக் கொள்கைளுக்கு ஆதரவு அதிகரித்துவருவதால், அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவருவருவது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்