Paristamil Navigation Paristamil advert login

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

11 மார்கழி 2023 திங்கள் 12:08 | பார்வைகள் : 1769


போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

போலியான கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கனடாவில் வசிக்கும், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர் இலங்கையிலுள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்