Paristamil Navigation Paristamil advert login

Seine-et-Marne : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! - இரண்டாவது நபரும் பலி!

Seine-et-Marne : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! - இரண்டாவது நபரும் பலி!

11 மார்கழி 2023 திங்கள் 12:39 | பார்வைகள் : 2806


Seine-et-Marne மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட, அதே வயதுடைய இரண்டாவது இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். 

 Neuilly-sur-Marne (Seine-Saint-Denis) நகரில் வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இரு இளைஞர்கள் ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக பயணிப்பதை பார்த்து, அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தியதோடு, அங்கிருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீற்றர்கள் தப்பிச் சென்று Chelles (Seine-et-Marne) நகரில் விபத்துக்குள்ளானார்கள்.

17 வயதுடைய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை ஒருவர் பலியாகியிருந்தார். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டாவது நபரும் பலியாகியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இருவேறு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்