Paristamil Navigation Paristamil advert login

பார்லிமென்ட்டில் கருத்துரிமை கழுத்து நெரிப்பு: ஸ்டாலின்

பார்லிமென்ட்டில் கருத்துரிமை கழுத்து நெரிப்பு: ஸ்டாலின்

12 மார்கழி 2023 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 1170


பாராளுமன்றத்தில் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

நடைபெற்று வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. அப்துல்லா , பெரியார் பெயரை குறிப்பிட்டு பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் வலைதளத்தில் ஸ்டாலின் கூறியது,

பாராளுமன்றத்தில்  கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது. மண்டல் பரிந்துரை அமல்படுத்த காரணமாக இருந்தவர் பெரியார் தான் என முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பாராளுமன்றத்தில் பேசினார்.   பெரியாரின்  பெயரை எங்கும் எப்போதும், எந்த சூழ்நிலையிலும்  பயன்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்