Paristamil Navigation Paristamil advert login

செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்

செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்

16 மார்கழி 2023 சனி 09:13 | பார்வைகள் : 2513


செங்கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள்  ஏவுகணை தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் யேமனிலிருந்தே ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

சரக்குகப்பல்களே தாக்கப்பட்டன என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

ஒரு கப்பல் ஆளில்லா விமானதாக்குதலிற்குள்ளாகியுள்ளது மற்றைய கப்பல் ஏவுகணை தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

ஆளில்லா விமானதாக்குதலை நிராகரித்துள்ள யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

சர்வதேச வர்த்தகத்திற்கு பல் அல் மன்டாப் நீரிணையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யேமனின் ஹெளத்திகளின் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏதோ ஒன்று அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான அல் ஜஸ்ரா என்ற கப்பலே தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

கிரேக்க துறைமுகத்திலிருந்து சிங்கப்பூரிற்கு சென்றுகொண்டிருந்த கப்பலே தாக்குதலிற்குள்ளாகியுள்ளது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அல்ஜஸ்ராவை தாக்கியது குறித்து எதனையும் தெரிவிக்காத ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் வேறு இரண்டு கப்பல்களை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்