Paristamil Navigation Paristamil advert login

Nord : படகு மூழ்கியதில் அகதி பலி!!

Nord : படகு மூழ்கியதில் அகதி பலி!!

16 மார்கழி 2023 சனி 09:35 | பார்வைகள் : 2940


அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அகதி ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Nord மாவட்டத்தின் கடலில் இடம்பெற்றுள்ளது., 66 அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று திடீரென மூழ்க ஆரம்பித்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கடற்பிராந்தியத்தை கண்காணிக்கும் Cross Gris-Nez படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நள்ளிரவு அளவில் அகதிகள் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். Grand Fort Philippe துறைமுகத்தில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கத்தொடங்கிய அனைவரையும் கடற்படையினர் மீட்டனர்.

ஆனால் துரதிஷ்ட்டமாக அகதி ஒருவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அகதி பலியானதாக இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டார்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்