யாழ்ப்பாணத்தில் 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிப்பு

22 மார்கழி 2023 வெள்ளி 02:36 | பார்வைகள் : 11032
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
ஆதிகபட்சமாக, சங்கானை பிரதேச செயலக பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 310 குடும்பங்களை சேர்ந்த 940 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 117 குடும்பங்களை சேர்ந்த 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1