பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை! - ஐவர் கைது!!

23 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 10122
Meurthe-et-Moselle மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்றில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (policiers de la sous-direction antiterroriste (SDAT) மற்றும் தேசிய உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (Direction générale de la Sécurité intérieure (DGSI)) ஆகிய இரு வீரர்களும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். Nancy, Toul மற்றும் Vandœuvre-lès-Nancy ஆகிய சிறு நகரங்களில் குறித்த வீரர்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் அதி தீவிர கண்காணிப்பை பின்பற்றுமாறு உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளதை அடுத்தே மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது Levallois-Perret நகரில் உள்ள DGSI அதிகாரிகளின் நிலையத்தில் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1